மனித உடல் ஆரோக்கியத்திற்குத் தண்ணீர் மிக அவசியமானது. பொதுவாகத் தாகம் எடுக்கும்போது நீர் அருந்தினால் அது சரியாகிவிடும். ஆனால், ஒருவருக்குத் தாகம் அடங்காமல் வாய் வறட்சி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தொடர்ந்தால், அது உடலில் உள்ள ஏதோ ஒரு பாதிப்பின் எச்சரிக்கையாக இருக்கலாம்.
தாகம் குறையாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்:
சர்க்கரை நோய் (Diabetes): ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அதனை வெளியேற்ற உடல் அதிகப்படியான சிறுநீரை உற்பத்தி செய்கிறது. இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, தாகம் தணியாமல் மீண்டும் மீண்டும் நீர் அருந்தத் தோன்றும்.
ரத்த சோகை (Anemia): உடலில் சிவப்பணுக்கள் குறைவதால் ஆக்சிஜனைச் சீராகக் கடத்த முடியாமல் போகிறது. இந்தச் சூழலைச் சமாளிக்க உடல் அதிகப்படியான திரவத்தைச் சார்ந்திருப்பதால் தாகம் அதிகரிக்கிறது.
தண்ணீர் குடித்தும் தாகம் தீரவில்லை என்றால், அதனை வெறும் தாகம் என்று மட்டும் பார்க்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது உடல்நலத்தைப் பாதுகாக்க உதவும்.
