உடல்நிலையைப் புரிந்து கொள்ளாமல் தினமும் வெந்நீர் குடிக்கும் பழக்கம், கோடைக் காலத்தில் ஆபத்தாக முடியலாம் என ஆயுர்வேத நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குளிர்காலத்தில் வெந்நீர் செரிமானத்திற்கு உதவினாலும், கோடையில் வளிமண்டல வெப்பத்தினால் உடலில் 'பித்தம்' அதிகரிக்கும். இந்த நேரத்தில் வெந்நீர் குடிப்பது அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் மற்றும் வாய் புண்களை உண்டாக்கும். மேலும், பித்த உடல்வாகு கொண்டவர்கள் மற்றும் வயிற்றுப் புண் இருப்பவர்கள் வெந்நீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
அதிகப்படியான சூடான நீர் வாய் மற்றும் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்து, உணவுக்குழாயை சேதப்படுத்தும். எனவே, கோடையில் தினமும் வெந்நீர் குடிப்பதற்குப் பதிலாக, உடல் நிலையை ஆராய்ந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் வெதுவெதுப்பான நீரைப் பருகுவது சிறந்தது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
