ஆயுர்வேத முறையில், தொப்புள் பகுதி “நாபி சக்ரா” என அழைக்கப்படுவதுடன், உடலின் முக்கிய சக்தி மையமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், தினசரி இரவு நேரத்தில் தொப்பிலில் சில சொட்டு எண்ணெய் வைப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஜீரணக் கோளாறுகள் மற்றும் வயிற்று வலி குறைவு
தொப்பிளில் எண்ணெய் வைப்பது மற்றும் அந்த பகுதியை மெதுவாக மசாஜ் செய்வது மூலம் வயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இதனால் ஜீரணக் கோளாறுகள் குறையும் என்றும், வயிற்று வலி தணியும் என்றும் நம்பப்படுகிறது. குறிப்பாக விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்துவது இதற்கு உதவியாக இருக்கலாம்.
மாதவிடாய் வலி குறைப்பு
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைக்கவும் இந்த முறையை சிலர் பயன்படுத்துகின்றனர். தொப்புள் பகுதியை மசாஜ் செய்வது தசைகள் தளர்வடைய உதவுகிறது என்று கூறப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
தொப்பிளில் எண்ணெய் வைப்பது உடலின் நரம்பு மண்டலத்தை தூண்டி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. இது உடல் சீரான செயல்பாட்டிற்கு ஆதரவாக இருக்கும் என கூறப்படுகிறது.
சருமம் மற்றும் கண் ஆரோக்கியம்
தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தொப்பிளில் வைப்பது சரும வறட்சியை குறைத்து, முகப்பொலிவை அதிகரிக்க உதவும் என நம்பப்படுகிறது. மேலும், கண் வறட்சியை குறைத்து பார்வை தெளிவடைய உதவும் என சிலர் கூறுகின்றனர்.
முடி வளர்ச்சிக்கு ஆதரவு
முடி உதிர்தல் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை தொப்பிளில் விட்டு மசாஜ் செய்தால் முடி வளர்ச்சி மேம்படும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
மனஅழுத்தம் குறைப்பு
தொப்புள் பகுதி பல நரம்புகளுடன் இணைந்துள்ளதால், இதில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது என கூறப்படுகிறது.
எந்த எண்ணெய்களை பயன்படுத்தலாம்?
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், வேப்பெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் போன்றவற்றை இரவு தூங்குவதற்கு முன் 2–3 சொட்டுகள் அளவில் பயன்படுத்தலாம். இதனை மென்மையாக மசாஜ் செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது.
மருத்துவ நிபுணர்கள் கருத்து
இத்தகைய பழக்கங்கள் பாரம்பரிய நம்பிக்கைகளில் அடிப்படையாக இருந்தாலும், எல்லா நன்மைகளுக்கும் உறுதியான அறிவியல் ஆதாரம் இல்லை என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். எந்தவொரு உடல்நலப் பிரச்சனைக்கும் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தொப்பிளில் எண்ணெய் வைக்கும் பழக்கம் பலர் மத்தியில் பரவலாக இருந்தாலும், இது துணை முறையாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மருத்துவ ஆலோசனைகளுடன் சேர்த்து பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கலாம்.
