நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை முடித்த கையோடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது 173-வது படத்தில் களமிறங்க உள்ளார். இப்படத்தைச் சிபி சக்கரவர்த்தி இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிக்கு மகனாக பாசில் ஜோசப்?
இப்படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில், அதாவது ரஜினிகாந்திற்கு மகனாக நடிக்க மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான பாசில் ஜோசப் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், படக்குழு தரப்பிலிருந்து இதுவரை மறுப்பு ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், இந்தத் தகவல் கிட்டத்தட்ட உறுதி என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ‘ராவடி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ள பாசில் ஜோசப்பிற்கு, ‘ரஜினி 173’ ஒரு மிகப்பெரிய அடையாளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மின்னல் முரளி’ போன்ற தரமான படங்களை இயக்கி இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த இவர், தற்போது சூப்பர்ஸ்டாருடன் இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
