RB Choudary Death | ஜீவா அப்பா மறைவு.. "CONDITION-ன FOLLOW பண்ணுங்கடா” ட்ரோலில் சிக்கிய பரிதாபம்

“கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் எத்தனை குடும்பம் இப்படி அழுது இருக்கும்?.. அன்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதை ஏளனமாக உன் படத்தில் டயலாக் வைத்ததன் விளைவு தான் இது” எனவும், “எனக்கு கர்மாவின் மீது அதீத நம்பிக்கை உள்ளது. அன்னைக்கு ஜீவா அந்த வசனத்தை குறிப்பிட்டு சிரித்தார் இன்று அழுகிறார்” எனவும் விமர்சித்து வருகின்றனர்.

G

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
RB Choudary Death | ஜீவா அப்பா மறைவு.. "CONDITION-ன FOLLOW பண்ணுங்கடா” ட்ரோலில் சிக்கிய பரிதாபம்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது மகனான நடிகர் ஜீவாவை சமூக வலைதளங்களில் கடுமையாக திமுகவின் ஆதரவாளர்கள் விமர்சித்து வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் உள்ள உள்ள மிக முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆர்.பி.சௌத்ரி. சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் திரைப்படங்களை தயாரித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 90க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்திருக்கிறார். சில படங்களை விநியோகமும் செய்துள்ளார்.

மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களான விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், ராஜகுமாரன், லிங்குசாமி என ஏகப்பட்ட இயக்குநர்களை அவர் தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தார். தற்போது பெரிதாக திரைப்பட தயாரிப்பில் ஈடுபடவில்லை என்றாலும் கடைசியாக வடிவேலு, பகத் ஃபாசில் நடித்த மாரீசன் படத்தை தயாரித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தன் மகன் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படத்தின் வெற்றி விழாவில் கடைசியாக ஆர்.பி.சௌத்ரி பங்கேற்றிருந்தார்.

கார் விபத்தில் மறைவு

இந்த நிலையில் ராஜஸ்தானில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றிருந்த ஆர்.பி.சௌத்ரி அங்கு நடைபெற்ற கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக இரங்கல் தெரிவித்த நிலையில் இன்று ஆர்.பி.சௌத்ரி உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. சினிமா மற்றும் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி அவரது மகன்களான நடிகர்கள் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

‘உனக்கு இது தேவை தான்’ - விளாசிய திமுக ஆதரவாளர்கள்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் நடிகர் ஜீவாவை சரமாரியாக விமர்சித்து தீவிர திமுக ஆதரவாளர்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அதாவது நடிகர் ஜீவா தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் ஆதரவாளராக உள்ளார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அந்த கட்சி வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக உள்ள நிலையில் அதனை கொண்டாடும் வகையில் விசில் அடித்து கண்கலங்கி நேற்று முன்தினம் வீடியோ வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் ட்ரெண்டானது.

அதேசமயம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜீவா நடிப்பில் தலைவர் தம்பி தலைமையில் படம் படம் வெளியானது. அதில் கரூர் துயர சம்பவத்தின் போது முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பேசிய ”படிச்சு படிச்சு சொன்னேனடா ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்கன்னு” என்ற வார்த்தைகள் கிண்டல் செய்யும் வகையில் வசனமாக வைக்கப்பட்டிருந்தது. இதே மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில் படம் தொடர்பாக செல்லும் இடங்களிலெல்லாம் அதனைப் பேசியிருந்தார்.

தற்போது தனது தந்தை மறைந்து விட்டார் என்ற சோகத்தில் ஜீவா இருக்கும் நிலையில் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆறுதல் தெரிவித்த தொடங்கினர். ஆனால் திமுக ஆதரவாளர்கள் என காட்டிக் கொள்ளும் ஒரு கூட்டம் மட்டும் ஜீவாவை கண்டபடி விமர்சித்து வருகிறது.

குறிப்பாக தந்தையின் இறப்புச் செய்தி குறித்து செல்போனில் பேசும் ஜீவா கதறி அழும் வீடியோ இணையத்தில் வெளியானது. அதனை பகிர்ந்துள்ள அந்த ஆதரவாளர்கள், “கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் எத்தனை குடும்பம் இப்படி அழுது இருக்கும்?.. அன்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதை ஏளனமாக உன் படத்தில் டயலாக் வைத்ததன் விளைவு தான் இது” எனவும், “எனக்கு கர்மாவின் மீது அதீத நம்பிக்கை உள்ளது. அன்னைக்கு ஜீவா அந்த வசனத்தை குறிப்பிட்டு சிரித்தார் இன்று அழுகிறார்” எனவும் விமர்சித்து வருகின்றனர்.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...