2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உலகளாவிய ரசிகர்களை ஈர்க்கும் வகையில், மெக்சிகோவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், படத்தின் ஆரம்ப கட்ட காட்சிகள் மற்றும் இதுவரை வெளியிடப்படாத படப்பிடிப்பு பின்னணிக் காட்சிகள் திரையிடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எஸ். எஸ். கார்த்திகேயா நேரில் கலந்து கொள்ள உள்ளார். மேலும், இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி காணொளி மூலம் ரசிகர்களிடம் உரையாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.
‘வாரணாசி’ திரைப்படத்தின் இந்த சர்வதேச நிகழ்வு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் என திரைப்பட வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
