லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக நடித்திருக்கும் 'லீடர்' திரைப்படம் வரும் ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது தணிக்கை உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பாயல் ராஜ்புத், ஆண்ட்ரியா, ஷாம், லால் மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைப்பில் லெஜண்ட் சரவணன் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள இந்தப் படத்தை மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்த படக்குழுவினர் தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றனர். மேலும், இந்தப் படத்தைத் தொடர்ந்து லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த புதிய படத்தையும் துரை செந்தில்குமாரே இயக்கவுள்ளதால், 'லீடர்' வெளியான கையோடு அந்தப் படத்தின் பணிகளும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 9-ல் திரைக்கு வரும் லெஜண்ட் சரவணனின் 'லீடர்': பிரம்மாண்ட ரிலீஸ்க்குத் தயாராகும் படக்குழு!
லெஜண்ட் சரவணன் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள 'லீடர்' திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
M
எழுதியவர்
1 மாதங்களுக்கு முன்

உங்கள் கருத்து
கருத்துகள் (0)
ஏற்றுகிறது...
இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்: