சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் படம் 'தாய் கிழவி'. இப்படத்தை நடிகை ஜோதிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெகுவாகப் பாராட்டியுள்ளார். பெண்மையின் வலிமையை அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ள இப்படத்தின் மூலம், இயக்குநர் சிவகுமார் முருகேசன் சமூகத்திற்கு மிக முக்கியமான செய்தியைத் தெரிவித்துள்ளதாக ஜோதிகா குறிப்பிட்டுள்ளார்.
ராதிகாவின் நடிப்புத் திறமைக்கு ஏற்ற மேடையை அமைத்துக் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜோதிகா, வயதுத் தடையைத் தாண்டி பெண்களை முன்னிலைப்படுத்தும் இத்தகைய படங்கள் சமூகத்திற்கும் சினிமாவிற்கும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
