இந்தியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் அபரிமிதமான வளர்ச்சியைச் சுட்டிக்காட்டிய சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், அம்மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் தளவாடத் துறைகளில் ஏற்கனவே சிங்கப்பூர் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளதை வரவேற்றார். மேலும், இந்த வர்த்தக உறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல இரு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் டி.பி.எஸ் (DBS) வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசினார். உத்தரப் பிரதேசத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் இந்தச் சந்திப்புகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
