‘மார்னிங் அகைன்' (Morning Again) எனப்படும் இந்த புதிய டிஜிட்டல் கலைப் படைப்பை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர் டோமோகாசு மட்சுயாமா உருவாக்கியுள்ளார்.
இந்த கலைத் திட்டம், நகரின் முக்கிய டிஜிட்டல் திரைகளில் தினமும் இரவு நேரங்களில் திரையிடப்படுகிறது. மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த டிஜிட்டல் காட்சிகள், ஒவ்வொரு இரவும் இரவு 11:57 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் கவனம் ஈர்க்கும் வகையில், நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நிகழ்ச்சி, கலை மற்றும் தொழில்நுட்பத்தின் இணைப்பை வெளிப்படுத்துகிறது.
‘மார்னிங் அகைன்’ படைப்பின் மூலம், நிச்சயமற்ற சூழ்நிலைகளில் கூட மனிதர்களின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை முக்கியமானவை என்பதைக் காட்டுவதே தனது நோக்கம் என்று கலைஞர் டோமோகாசு மட்சுயாமா தெரிவித்துள்ளார். ஒரு நாள் முடிந்து மற்றொரு நாள் தொடங்கும் அந்த இடைவேளையின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த படைப்பை வடிவமைத்ததாகவும் அவர் கூறினார்.
இந்த முயற்சி, உலகளவில் டிஜிட்டல் கலைக்கான புதிய அளவுகோலை உருவாக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், நியூ யார்க் சிட்டி நகரின் பண்பாட்டு பல்வகைமை மற்றும் அதன் உற்சாகமான நகர வாழ்க்கையை உலகத்திற்கு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது.
