தென்னாப்பிரிக்க நாட்டான மோசாம்பிக் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் சிக்கிய மக்களுக்கு உதவியாக சென்ற லண்டன் தீயணைப்பு வீரர்கள் 10 நாள் மீட்பு பணியை முடித்து தாய்நாட்டிற்கு திரும்பினர். பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
80-க்கும் மேற்பட்டோர் உயிர் காப்பாற்றப்பட்டனர்
லண்டன் தீயணைப்பு படை மற்றும் UK-ISAR குழுவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், வெள்ளநீரில் சிக்கியிருந்த 80-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சேதமடைந்த கட்டிடங்களில் சிக்கியவர்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மனிதாபிமான உதவிகள் வழங்கல்
மீட்பு பணிகளுடன் சேர்த்து குடிநீர், உணவு உள்ளிட்ட அவசர உதவிப் பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த பணிகள் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
தொடர்ச்சியான கனமழையால் வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் சேதமடைந்த நிலையில், 8.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கையும் 200-ஐ கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
