தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிக்கையை இந்திய தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ்குமார் வெளியிட்டார். ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை ஆணையர் ஞானேஷ்குமார் 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதியை வெளியிட்டார்.
அதன்படி,
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் மே 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
கேரளாவில் ஏப்ரல் 9 ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் மே 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
அஸாமில் ஏப்ரல் 9 ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் மே 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23 முதல் கட்டமாகவும் ஏப்ரல் 29 இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறும்.
புதுச்சேரியில் ஏப்ரல் 9 ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் மே 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் மே 4 ம் தேதி முடிவுகள் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
