பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளதாகக் கருதப்படும் சூழலில், ராமதாஸ் தனது தொண்டர்களுக்கு உருக்கமான மற்றும் எழுச்சியூட்டும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தொண்டர்களின் மனதில் எழுந்துள்ள சிறு கலக்கத்தை தான் அறிவதாகவும், ஆனால் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நாம், கண்ணில் தென்படும் சாதாரண வாகனங்களில் ஏறிப் பயணித்தால் இலக்கை அடைய முடியாது என்றும் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
வென்றெடுத்த உரிமைகளும் வருங்கால இலக்குகளும்
சமூக நீதி வரலாற்றில் பாமக வென்றெடுத்த 6 இட ஒதுக்கீடுகளைத் நினைவு கூர்ந்துள்ள அவர், இன்னும் வெல்ல வேண்டிய இலக்குகள் ஏராளம் இருப்பதாகப் பட்டியலிட்டுள்ளார். போதை இல்லா தமிழகம், தரமான கல்வி, மருத்துவம், மற்றும் பொருளாதார முன்னேற்றம் போன்ற லட்சியங்களை அடைய சோர்வின்றி உழைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். நம்மிடம் இருக்கும் பலம் குறையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், "உன்னை அறிந்தால்" என்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டித் தொண்டர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டியுள்ளார்.
விரைவில் வரும் நமக்கான வாகனம்
கூட்டணி குறித்த எதிர்பார்ப்புகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, நமக்கான வாகனம் இதோ நம் அருகிலேயே வந்துவிட்டது என்றும், அதில் பயணித்து லட்சியத்தை வெல்வோம் என்றும் ராமதாஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் தொண்டர்களுடன் இணைந்தே இருப்பேன் என்றும், தொடர்ந்து அவர்களுடன் உரையாடுவேன் என்றும் உறுதியளித்துள்ள இந்த கடிதம், பாமக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
