இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் இன்று முதல் தொடங்குகிறது. ரமலான் மாதத்தின் முதல் பிறை தென்பட்டதிலிருந்து 30 நாட்கள் நோன்பு கடைப்பிடிக்கப்படும். அதன் பின்னர் இறுதியாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். காலை சூரியன் உதிவதற்கு முன்பு உண்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பின்பு சூரியன் அஸ்தமனம் நேரத்தில் நோன்பை திறக்க வேண்டும். இந்த இடைப்பட்ட நேரத்தில் தண்ணீரோ உணவோ எதுவும் அருந்தக்கூடாது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் ரமலான் மாத முதல் பிறை தென்பட்டது.
அதன் அடிப்படையில் நாளை முதல் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள். ரமலான் மாதத்தின் சிறப்பு இரவு தொழுகை இன்று முதல் தொடங்குகிறது.
