அதிமுகவில் நிலவும் அதிகாரப் போட்டிகளுக்கு இடையே, அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி தற்போது புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார். தனது புதிய கட்சிக்கு "புரட்சி அண்ணா திமுக" என்று பெயரிட்டுள்ள அவர், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதிமுகவின் தற்போதைய செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள தொண்டர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து பேசிய புகழேந்தி, "புரட்சி என்பது ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரை குறிக்கிறது. ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் உண்மையான கொள்கைகளை மீட்டெடுப்பதே தமது கட்சியின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.
அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்களால் உண்மையான தொண்டர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும், அவர்களை ஒன்றிணைத்து தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை உருவாக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் புதிய கட்சிகள் உதயமாகி வரும் சூழலில், புகழேந்தியின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஒரு புதிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.
