தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான பூண்டி கே. கலைவாணன் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று இக்கோரிக்கையை முன்வைத்து மனு தாக்கல் செய்யப்பட்டது. கூத்தாநல்லூர் நகர கழகச் செயலாளர் எஸ்.வி. பக்கிரிசாமி தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த விருப்ப மனுவை கூத்தாநல்லூர் நகர கழகப் பொருளாளரும், பொன்னாச்சி பொது சேவை மையம் அறக்கட்டளை நிறுவனத் தலைவருமான எஸ்.எஸ். ஹாஜா நஜ்முதீன் இன்று வழங்கினார். திருவாரூர் தொகுதியின் வளர்ச்சிப் பணிகளைத் தொடரவும், கழகத்தின் வெற்றியை உறுதி செய்யவும் தற்போதைய உறுப்பினரே மீண்டும் போட்டியிட வேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நகர கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருவாரூர் தொகுதிக்கான இந்த விருப்ப மனு தாக்கல் மாவட்ட அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
