தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 1) மதுரைக்கு வருகை தந்தார். மதுரையில் ரூ. 4,400 கோடி மதிப்பிலான பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர், அதனைத் தொடர்ந்து அறுபடை வீடுகளில் முதலாவதான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். மேடையில் தனது உரையைத் தொடங்கிய பிரதமர், "வெற்றிவேல், வீரவேல்" என முழக்கமிட்டு, "பாண்டிய நாட்டு வீரமண்ணின் மக்களே வணக்கம்" எனத் தமிழில் பேசி மதுரைக் காரர்களை உற்சாகப்படுத்தினார்.
தற்கொலை செய்த பக்தருக்காகப் பிரதமர் இரங்கல்
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதி கோரி தற்கொலை செய்து கொண்ட பூரணசந்திரன் என்ற பக்தரின் நினைவாகப் பிரதமர் தனது உரையில் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்தார். "தரிசனம் செய்தபோது எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டது. அந்த பக்தரின் தியாகம் என்னை நெகிழச் செய்துள்ளது. தமிழக மக்களுக்காகவும், தேசத்தின் நலனுக்காகவும் இறைவனிடம் வேண்டிக்கொண்டேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார். "ஊழல் செய்வதில் திமுக அமைச்சர்களுக்கு இடையே பெரும் போட்டியே நடக்கிறது. மதுரையை திமுகவிற்குப் பிடிக்காது, ஏனெனில் மதுரை மக்கள் என்றும் எம்.ஜி.ஆர் பக்கமே நின்றவர்கள். வாரிசு அரசியலால் மக்கள் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டது. 'யாரையும் கண்டு பயமில்லை' என்று திமுகவில் ஒருவர் பேசியது, உண்மையில் என்னை அவர்கள் பாராட்டுகிறார்கள் என்பதையே காட்டுகிறது" என்று கிண்டலாகக் காங்கிரஸ் தாரை வார்த்தபோது திமுக மௌனமாக இருந்து துரோகம் இழைத்ததாகக் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி
"இந்தியாவிலேயே காங்கிரஸை முதலில் விரட்டியடித்த மாநிலம் தமிழ்நாடுதான். அதேபோல், ஊழல் நிறைந்த திமுகவை வீழ்த்தி தமிழக மக்கள் இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தேர்ந்தெடுக்கத் தயாராகிவிட்டார்கள். தமிழகத்தில் அமையப்போகும் அடுத்த ஆட்சி NDA ஆட்சியாகத்தான் இருக்கும்" என்று பிரதமர் மோடி மதுரையில் முழக்கமிட்டார்.
