உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இறுதிப்போட்டியை நழுவ விட்ட இந்திய அணி

கஜகஸ்தானில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

2 மணி நேரத்திற்கு முன்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இறுதிப்போட்டியை நழுவ விட்ட இந்திய அணி

ஆண்கள் ஸ்கீட் பிரிவு தகுதிச்சுற்று இரண்டாவது நாள் போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் இந்திய அணியில் இருந்து பங்கேற்ற எந்த வீரரும் முதல் எட்டு இடங்களுக்குள் முன்னேறாததால், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு கைமாறியது.

தகுதிச்சுற்று முடிவில், மராஜ் அகமது கான் 18வது இடத்தையும், ஆனந்த் சித் சிங் நருவா 38வது இடத்தையும், குர்ஜோத் சிங் கங்குரா 54வது இடத்தையும் பெற்றனர்.

ரேங்கிங் புள்ளிக்காக மட்டும் பங்கேற்ற வீரர்களில், பவ்தேக் சிங் கில் 19வது இடத்தையும், அபைசிங் செகோன் 71வது இடத்தையும் பிடித்தனர்.

பெண்கள் ஸ்கீட் பிரிவிலும் இந்திய அணிக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. ரைசா தில்லான் 17வது இடம், பரினாஸ் தலிவால் 32வது இடம், கனேமத் சிக்கோன் 33வது இடம் பெற்றனர். இதனால் அவர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.

மொத்தத்தில், இப்போட்டியில் இந்திய அணிக்கு எதிர்பார்த்த அளவிலான முன்னேற்றம் கிடைக்காதது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...