இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரிவில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி, ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி கவனம் ஈர்த்தது.
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே – வலுவான இலக்கு
கொழும்புவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. அதனால் ஆஸ்திரேலியாவுக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பந்துவீச்சில் ஆதிக்கம் – ஆஸ்திரேலியா சரிவு
இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி, ஜிம்பாப்வே பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜிம்பாப்வே அணிக்காக பிளெஸ்ஸிங் முசரபானி 4 விக்கெட்டுகளும், பிராட் எவன்ஸ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தனர். இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கேப்டன் சிக்கந்தர் ராசா நெகிழ்ச்சி
போட்டிக்குப் பிறகு பேசிய ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா, இந்த வெற்றி அணிக்கு மிகுந்த பெருமையை அளிப்பதாக தெரிவித்தார். இலங்கை மைதான நிலைமையை நன்றாக அறிந்திருந்ததால் இந்த ஸ்கோர் போதுமானது என நம்பியதாகவும், அணியின் ஒட்டுமொத்த செயல்பாடே வெற்றிக்கு காரணம் எனவும் அவர் கூறினார்.
