குஜராத் கபடி சங்கம் மற்றும் வதோதரா கபடி சங்கம் இணைந்து நடத்தும் இந்தப் பிரம்மாண்ட கபடிப் போட்டி இன்றும் தொடங்கி வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய அமெச்சூர் கபடி கூட்டமைப்பின் அங்கீகாரத்துடன் நடைபெறும் இந்தத் தொடரில், இந்தியா முழுவதும் இருந்து 31 மாநில மற்றும் நிறுவன அணிகள் மகுடத்திற்காகப் போட்டியிடுகின்றன.
நடப்பு சாம்பியனான சர்வீசஸ் அணி தனது பட்டத்தைத் தக்கவைக்கத் தீவிரமாக உள்ள நிலையில், பலம் வாய்ந்த ரயில்வே, ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா அணிகள் அந்த அணிக்கு கடும் முட்டுக்கட்டை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் தலைசிறந்த கபடி வீரர்கள் பங்கேற்பதால், நான்கு நாட்களும் வதோதராவில் ஆட்டங்கள் அனல் பறக்கும்.
