இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங், புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று (பிப்.27) உயிரிழந்தார். கல்லீரல் புற்றுநோய்க்காக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எல்பிஜி சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு குடும்பத்தைக் கவனித்து வந்த கான்சந்த் சிங், தனது மகன் ரிங்கு சிங் கிரிக்கெட் உலகில் சாதனை படைப்பதில் உறுதுணையாக இருந்தார். தற்போது உலகக் கோப்பை தொடருக்காகத் தயாராகி வரும் ரிங்கு சிங், தந்தையின் மறைவையடுத்து இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக அலிகார் விரைந்துள்ளார். அவரது மறைவிற்கு சக கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
