நான்காவது டி20: தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய மகளிரணி – 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி,தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் விளையாடி வரும் நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது.

2 மணி நேரத்திற்கு முன்
நான்காவது டி20: தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய மகளிரணி – 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஜொஹன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.

இந்தியா தரப்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 43 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோருக்கு முக்கிய பங்களிப்பு செய்தார். தொடர்ந்து தீப்தி சர்மா 36 ரன்கள், ரிச்சா கோஷ் 34 ரன்கள் சேர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து 186 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்கா அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்தியா தரப்பில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட தீப்தி சர்மா, 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே வழங்கி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் தன்னம்பிக்கையை மீட்டுள்ளது. இரு அணிகளுக்கிடையேயான கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...