கேரளாவில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட இளைஞரைத் துணிச்சலுடன் தட்டிக்கேட்ட மூதாட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. அந்த வீடியோவில் இருந்த பிரபாவதி அம்மா என்பவரை, கேரள மோட்டார் வாகனத் துறை (MVD) அதிகாரிகள் நேரில் சந்தித்துச் சிறப்பித்துள்ளனர். அவரது வீட்டிற்கே சென்ற அதிகாரிகள், போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக அவருக்குப் பொன்னாடை போர்த்தித் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இளைஞருக்கு அபராதமும் கட்டாய விழிப்புணர்வு வகுப்பும்
மூதாட்டியை அவமரியாதை செய்யும் விதமாகவும், போக்குவரத்து விதிகளை மீறும் வகையிலும் வாகனம் ஓட்டிய அந்த இளைஞர் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, அந்த இளைஞரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, ஓட்டுநர் விழிப்புணர்வு தொடர்பான ஒரு வார கால வகுப்பில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.