தலைநகர் டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஓக்லா தொழிற்பேட்டையில், எட்டு வயது சிறுமி ஒருவரை மூன்று சிறுவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குடோனுக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி அழைத்துச் சென்று, கடந்த மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் பகல் நேரத்தில் இந்தச் சிறுவர்கள் இக்கொடூரச் செயலில் ஈடுபட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. 12 மற்றும் 13 வயதுடைய அந்த மூன்று சிறுவர்களும், சிறுமியின் உள்ளாடைகளைக் கழற்றி தங்களது அத்துமீறலைத் தொடர்ந்துள்ளனர்.
மருத்துவப் பரிசோதனை
இந்தச் சம்பவம் குறித்து மார்ச் 14 அன்று ஓக்லா போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. வழக்கை விசாரித்த பெண் அதிகாரி தலைமையிலான குழுவினர், சிறுமியை உடனடியாக எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த மருத்துவப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சில மணி நேரங்களிலேயே சம்பந்தப்பட்ட மூன்று சிறுவர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
