நேற்று, சுமார் 232 பயணிகள் மற்றும் 13 ஊழியர்களுடன், சூரிச் நகரை நோக்கி புறப்பட இருந்த விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் ஒரு இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதுடன் புகை வெளியேறுவதை விமானி கவனித்தார்.
உடனடியாக விமானத்தை இயக்காமல் நிறுத்திய விமானி, அவசரநிலையை அறிவித்தார். இதையடுத்து விமான நிலையத்தில் அவசர சேவை பிரிவுகள் செயல்படுத்தப்பட்டன.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் அவசர வெளியேறும் வாயில்கள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். துரிதமான நடவடிக்கையால் பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
