மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ள எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், நீதித்துறையில் நிலவும் ஊழல் குறித்து இடம்பெற்றுள்ள கருத்துகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ‘நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு’ என்ற தலைப்பிலான பாடப்பகுதியில், நீதிமன்றங்களின் படிநிலைகள் மற்றும் நடைமுறைகளுடன் சேர்த்து, நீதித்துறையில் நிலவும் முறைகேடுகள் மற்றும் கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடப்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நீதித்துறையில் ஊழல் நிகழ்வது பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஆர். கவாய் கடந்த 2025-ம் ஆண்டு தெரிவித்த கருத்தும் இதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டபோது, தலைமை நீதிபதி சூர்ய காந்த் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். எந்தவொரு அமைப்புக்கும் களங்கம் விளைவிப்பதை அனுமதிக்க முடியாது என்றும், இது ஒரு திட்டமிட்ட செயலாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், நீதித்துறையின் தலைவர் என்ற முறையில் இந்த விவகாரத்தில் சட்டப்படி தானாக முன்வந்து (Suo Motu) உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நாட்டின் ஒட்டுமொத்த நீதிபதிகளும் இந்தப் பாடப்பகுதியால் மனவேதனை அடைந்துள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
முன்னதாக, 2016 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக 7,528 புகார்கள் வந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்த தகவல் இந்தச் சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு, பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தேவையற்ற மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை உடனடியாக நீக்க முடிவு செய்துள்ளது. நீதித்துறை குறித்து இத்தகைய விமர்சனங்களை மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கக் கூடாது என்று உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 2016 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக 7,528 புகார்கள் வந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்த தகவல் இந்தச் சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு, பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தேவையற்ற மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை உடனடியாக நீக்க முடிவு செய்துள்ளது. நீதித்துறை குறித்து இத்தகைய விமர்சனங்களை மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கக் கூடாது என்று உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
