பொதுவிடுமுறை நாளாக இருக்கும் இந்த நாளில்(april-23) மக்கள் சுற்றுலா தளங்களுக்கு அதிக அளவில் செல்வதைத் தடுக்கவும், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் மலைப்பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களுக்கு வாக்குப்பதிவு நாளில் அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைப்பிரதேசங்களில், கோடைக்கால சீசனை முன்னிட்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பது வழக்கம். இதனால், வாக்குப்பதிவு நாளில் மக்கள் திரளக் கூடும் சூழ்நிலையை தவிர்க்கும் வகையில், ஊட்டி, கொடைக்கானல் போன்ற முக்கிய சுற்றுலாத் தளங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் அனைத்து சுற்றுலாத் தளங்களும் வழக்கம்போல் திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து முக்கிய சுற்றுலாத் தலங்களும் இதேபோன்று வாக்குப்பதிவு நாளில் மூடப்பட உள்ளன. தேர்தல் நாளில் அதிகளவு மக்கள் வாக்களிப்பில் ஈடுபட வேண்டும் என்பதற்காக அரசு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
