பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, மே 20 முதல் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை அமல்படுத்தத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை 2026 ஆம் ஆண்டுக்கான பரந்த அளவிலான பணியாளர் குறைப்பின் முதல் கட்டமாகும். ஆரம்ப கட்டத்தில் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் சுமார் 10 சதவீதம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் கூடுதல் பணிநீக்கங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப, செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முதலீடுகளை அதிகரிக்க மெட்டா நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக, உள் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் AI நிபுணர்களை பணியமர்த்தும் செலவுகள் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக, இந்நிறுவனத்தின் செலவுகள் குறிப்பிடத்தக்க அளவில் உயரும் என முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், செலவின கட்டுப்பாடு மற்றும் செயல்திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு இந்த பணியாளர் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் தொழில்நுட்ப துறையில் இடம்பெற்ற மிகப்பெரிய ஆட்குறைப்புகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. மெட்டாவின் இந்த முடிவு, அதன் உள் மறுசீரமைப்பு மற்றும் AI மையப்படுத்தப்பட்ட எதிர்கால திட்டங்களை வலியுறுத்துகிறது
