ஜூலை 1 முதல் அமல்: 125 நாள் வேலைவாய்ப்புடன் புதிய “வி.பி.ஜி. ராம் ஜி” திட்டம்

“விக்ஸித் பாரத் ரோஸ்கர் மற்றும் அஜிவிகா மிஷன்” (வி.பி.ஜி. ராம் ஜி) திட்டம் வரும் ஜூலை 1, 2026 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளது.

58 நிமிடங்களுக்கு முன்
ஜூலை 1 முதல் அமல்: 125 நாள் வேலைவாய்ப்புடன் புதிய “வி.பி.ஜி. ராம் ஜி” திட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ) மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள “விக்ஸித் பாரத் ரோஸ்கர் மற்றும் அஜிவிகா மிஷன்” (வி.பி.ஜி. ராம் ஜி) திட்டம் வரும் ஜூலை 1, 2026 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளது.

இந்த புதிய திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில் புதிய சட்டப்பூர்வ கட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா கடந்த 2025 டிசம்பர் 16-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய திட்டத்தின் முக்கிய அம்சமாக, கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு உத்தரவாதம் 100 நாட்களிலிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊதிய பாதுகாப்பும், வருமான நிலைத்தன்மையும் வலுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஊதிய வேலைவாய்ப்பை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. “விக்ஸித் பாரத் 2047” இலக்குடன் இணைந்து, நீடித்த கிராம வளர்ச்சியை உருவாக்கும் நோக்கமும் இதில் இடம்பெற்றுள்ளது.

பஞ்சாயத்துகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படுவதோடு, “விக்ஸித் கிராம பஞ்சாயத்து திட்டங்கள்” மூலம் திட்டமிடலில் உள்ளூர் நிர்வாகத்தின் பங்கும் அதிகரிக்கப்படுகிறது. தேசிய அளவில் ஒருங்கிணைப்பதற்காக “விக்ஸித் பாரத் தேசிய ஊரக கட்டமைப்பு அடுக்கு” என்ற புதிய அமைப்பும் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நிதி ஒதுக்கீட்டில் நெறிமுறை சார்ந்த அணுகுமுறை, மத்திய அரசின் ஆதரவு பெற்ற கட்டமைப்பு, மாநிலங்களுடன் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றின் மூலம் பொறுப்புணர்வும் முன்கணிப்பு திறனும் மேம்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக கிராமப்புற சமூக பாதுகாப்பின் முக்கிய தூணாக இருந்து வந்த எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ திட்டம், கிராமப்புற மக்களுக்கு கூலி வேலைவாய்ப்பு வழங்குதல், வருமானத்தை நிலைப்படுத்துதல் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு உருவாக்குதல் போன்றவற்றில் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புதிய வி.பி.ஜி. ராம் ஜி திட்டம் மூலம் விவசாய உச்சகட்ட காலங்களில் தொழிலாளர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையிலும், மீதமுள்ள நாட்களில் தொடர்ச்சியான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையிலும் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் கிராமப்புற தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இருவரும் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...