விமான பயணிகளிடம் இருந்து அதிகரித்துவரும் புகார்களைத் தொடர்ந்து, ரீபண்ட் மற்றும் டிக்கெட் திருத்த விதிகளில் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இனி, டிக்கெட் வாங்கிய 24 மணி நேரத்திற்குள் பெயரில் திருத்தம் செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பயண ரத்து மற்றும் ரீபண்ட் விஷயங்களில், ஏஜெண்டுகள் மூலம் புக் செய்திருந்தாலும், 14 நாட்களுக்குள் பயணிகளுக்குப் பணத்தைத் திருப்பித் தரும் பொறுப்பு அந்தந்த விமான நிறுவனங்களுக்கே உரியது என DGCA தெளிவுபடுத்தியுள்ளது.
மருத்துவ அவசர காலங்களில் டிக்கெட் ரத்து செய்தால் கட்டணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிமுறைகள் பயணிகளுக்குப் பெரிய நிம்மதியை அளித்துள்ளன.
